28/03/2010

2.முதலீட்டாளர்கள்(சந்தையில் புதியதாக முதலீடு செய்பவர்களுக்கு)







முதலீட்டாளர்கள்

புதியதாக வெளியிடும் பங்குகளை வாங்கும்பொழுது (IPO-Initial Public Issue) கவனிக்கவேண்டியவை.(Fundamental Analysis)

  1. நீங்கள் வாங்கும் பங்கின் நிறுவனத்தின் உரிமையாளர்களின் விவரம்.
  2. நிறுவனத்தை நடத்த தகுதியானவர்களா? தலைமை பொறுப்பு மாறும்பொழுது அதன் செயல்பாடுகள் மாற வாய்ப்பு அதிகம்.
  3. நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதா?
  4. நிறுவனத்தின் நற்பெயர் ( GoodWill )
  5. கடந்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் இலாபம் தொடர்ந்து உயர்ந்து வருகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
  6. வாடிக்கையாளர்களுடன் நிறுவனத்தின் உறவு ( Public Relationship) எந்த நிலையில் உள்ளது.
  7. வைப்புநிதி ( Reserve ) அதாவது, பற்றாகுறை சமயத்தில் உபயோகிக்கும் பணம் கையிருப்பு எவ்வளவு உள்ளது.
  8. நிறுவனம் தனது போட்டியாளர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
  9. நிறுவனத்தின் மீது வரிஏய்ப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் கொடுத்த வழக்கு உள்ளதா மேலும் வெளிநாட்டு நாட்டுகிளைகளில் அதன்மீது ஏதாவது வழக்குகள் உள்ளதா? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
  10. நிறுவனம் என்ன காரணத்திற்கு பங்கு சந்தையில் பணம் வசூலிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். முந்தைய கடனை வேண்டும்.அடைப்பதற்கு, பங்குகளை வெளியிட்டால் அந்நிறுவனத்தின் நிதிநிலை சரியாக இல்லை.
  11. விளம்பரங்களை கவனத்தில் கொள்ள தேவையில்லை
  12. நிறுவனம் இலாபத்தில் பங்கு (Dividend ), Bonus தருவதாக அறிவித்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
  13. நிறுவனத்தின் காலாண்டு அறிக்கைகளை கவனிக்க வேண்டும். ,இதனை அறிய www.sebi.gov.in இந்த வலைதளத்தில் பார்க்கலாம்.

(Secondary Market)

IPO வில் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை, இவற்றிலும் கவனிக்கப்பட வேண்டும்.

தற்போது வர்த்தகத்தில் உள்ள பங்குகளை வாங்கும்பொழுது கவனிக்க வேண்டியவை.


கூடுதல் பங்கு ( Bonus shares )
நிறுவனம் கூடுதல் பங்குகள் தருகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இலாபத்தில் பங்கு
ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதியை தமது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கு கிறது. லாபத்தில் பங்கின் விழுக்காடு (%) தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறதா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பத்திர பிளவு (Split )
நமது பங்கின் அதிகாரபூர்வமான விலையை குறைப்பார்கள், இதனால் இலாபம் கூடுவதில்லை.
உதாரணம்:- Infosys பங்கு Rs.11,000 வரை போனது, இதனை Split செய்தார்கள். அது Rs.1800 ஆக குறைத்தனர். இதற்கு காரணம் அனைத்து தரப்பினரும் வாங்குவதற்கு ஏதுவாக மாற்றப்படுகிறது.

புத்தகத்தில அந்த பங்கின் மதிப்பு (Book Value)

இதவே அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ஆகும்.

பங்கு ஈட்டல் (EPS - Earning Per Share):-

இந்ந ஆண்டின் நிகர லாபம் / மொத்த பங்கு கள் = EPS ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடும்போது EPS உயர்ந்துகொண்டே போனால் அந்த நிறுவனம் லாபம் ஈட்டும் திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.


ஒவ்வொரு பங்கின் விகிதம்(P/E Ratio- Price / Earning Ratio)
ஒரு நிறுவனத்தின் EPS 10 ஆக இருக்கும்பொழுது அதன் சந்தையின் மதிப்பு 10 அல்லது அதற்குமேல் உள்ளது. இவ்வாறு ஒரு பங்கின்விலை பங்குச்சந்தையில் EPS விட எத்தனை மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்பதை கணக்கிடப்படுவதயே P/E Ratio என்கிறோம்.
P / E = நடப்பு சந்தை விலை ( Current Market ) / பங்கு ஈட்டல் (EPS) .
ஒரு பங்கின் EPS ற்க்கும் அதன் பங்குசந்தை மதிப்புற்க்கும் துறையை சார்ந்து மாறுபடுகிறது.

கட்டுமான துறையின் P/E Ratio 10 ஆக இருந்தால் நிங்கள் வாங்க நினைக்கும் நிறுவனத்தின் P/E Ratio
10ரூ குறைவாக இருந்தால் மட்டுமே அந்த பங்கிள் முதலீடு செய்யலாம்.
10ரூ அதிகமாக இருந்தால் அதனை தவிர்ப்பது நல்லது.


உதாரணம்:- வங்கித்துறை சிறப்பாக இருந்தாலும் ஒவ்வொரு வங்கியின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். வங்கிகள் தொழில்துறை, வீட்டுக் கடன். கிராமப்புற வளர்ச்சி, என தனி தனி நிறுவனங்களாக செயல்படுகிறது.இவற்றில் தற்போது சிறப்பாக உள்ள துறையை சார்ந்த வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். இதுவே மற்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும். நல்ல நிறுவனம் அதன் செயல்பாடுகள் நமக்கு திருப்தி அளிக்கின்றன. உடனே அதன் பங்குகளை வாங்க நினைக்க கூடாது.
பங்கின் விலை உயரத்தில் இருக்கும்பொழது வாங்கினால் அதுவும் ஆபத்துதான். சற்று விலை குறைந்த பின்பு வாங்கலாம்.